திமுக வேட்பாளர் சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பு


கோட்டக்குப்பம் 16 வது வார்டு திமுக

வேட்பாளர் சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோட்டக்குப்பம் பேரூராட்சி 16வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் சரவணன் போட்டியிடுகிறார். இவர், நேற்று சின்ன கோட்டக்குப்பம் மெயின்ரோடு, எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது அப்பகுதி வாக்காளர்களிடம் அவர் கூறியதாவது:

நான் மீண்டும் வெற்றி பெற்றால் சின்ன கோட்டக்குப்பம் 16வது வார்டில் பொதுகழிவறை வசதி ஏற்படுத்தி தரப்படும். 16 வது வார்டில் தனி ரேஷன்கடை அமைத்து தரப்படும். நிரந்தர மின்தடையை போக்க கோட்டக்குப்பத்தில் துணை மின்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 16வது வார்டில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் குப்பை தொட்டி அமைத்து தரப்படும். அனைத்து தெருக்களுக்கும் தெரு பெயர் பலகை அமைத்து தரப்படும். 10ம்வகுப்பு மற்றும் மேல்படிப்பு படித்தவர்களுக்கு திருமண உதவி திட்டம் பெற்றுத்தரப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை கூறினார்.

பிரசாரத்தின்போது திமுக நிர்வாகிகள் அய்யனார், மாறன், கருணாமூர்த்தி, செல்லப்பன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.