கோட்டக்குப்பம் நகராட்சிக்கான புதிய அலுவலகம் கட்டிடம் கருத்தகாட்டு அய்யனாரப்பன் கோவில் இடத்தில் கட்ட பெறுவாரியான கவுன்சிலர்கள் எதிர்ப்பு..
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகரட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.அந்த நகராட்சிக்கு என்று புதிய அலுவலகம் கட்டிடம் கட்ட கருத்தக்காட்டு அய்யனாரப்பன் கோவில் இடத்தில் கட்ட கடந்த 24-11-2023 அன்று நகராட்சி ஆணையரால் ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை ஒட்டி இன்று கோட்டக்குப்பம் நகராட்சியின் பெறுவாரியான கவுன்சிலர்கள் அந்த புதிய அலுவலகம் கட்டிடம் கட்ட தாங்கள் நகரமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை எனவும் அந்த ஒப்பந்த புள்ளி அறிவிப்பை நகராட்சி ஆணையாளர் அவர்கள் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கு மனுக் கொடுத்தனர்.. நகராட்சி ஆணையாளர் அவர்கள் அந்த ஒப்பந்தபுள்ளி அறிவிப்பை திரும்ப பெறவில்லை எனில் பெறுவாரியா கவுன்சிலர்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்..