ஏன் ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்? ஓட்டுரிமை பெற்ற வரலாறு.


வாக்கு என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை. மக்கள் ஆட்சியில் மக்கள்தான் தங்களை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 18 வயதான ஒவ்வொருவரும் தங்களுக்கு அளிக்கப் பட்டுள்ள வாக்குரிமையை அவசியம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தனை பேரும் முழுமையாகப் பயன்படுத்தினால்தான் சிறந்த முடிவைத் தேர்ந்தெடுக்க முடியும்.

வாக்குரிமை எளிதாக எல்லோருக்கும் கிடைத்து விடவில்லை. ஆரம்பக் காலத்தில் செல்வந்தர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்தது. பிறகு படித்தவர்களுக்கு அந்த உரிமை கிடைத்தது.

அதற்குப் பிறகு ஆண்களுக்கு மட்டும் உரிமை வழங்கப்பட்டது. பல ஆண்டுகாலம் பெண்கள் போராட்டம் நடத்தி, தங்களின் இன்னுயிரைத் தந்து, தங்களுக்கான வாக்குரிமையைப் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவில் 1951-52-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 21 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1989, மார்ச் 28 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்களிக்கலாம் என்ற சட்டம் வந்தது. இவ்வளவு போராடிப் பெற்ற வாக்குரிமையை, நாம் மதிக்க வேண்டும். அதைப் பயன்படுத்தி, நியாயமானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மறவாதீர் ஏப்ரல் 18, அனைத்து ஓட்டுரிமை இந்தியரின் கடமை…

One comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.