நித்யானந்தா போஸ்டரிலும் ஆப்பு………..


நித்யானந்தா போஸ்டரிலும் ஆப்பு………

கோட்டக்குப்பத்தில் பூரண வரவேற்ப்பு ??

 

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா சாமியார் நெருக்கமாக இருந்ததாக டிவி,

பத்திரிகைகளில் படங்கள், செய்தி வெளியானதை தொடர்ந்து அவரது மடங் கள்,

தியான நிலையங்கள்மக்களால் எரிக்கப்பட்டன.

அவருக்கு நாடு முழு வதும் எதிர்ப்பு பரவியது. கர்நாடக போலீ சார், அவர் மீது வழக்குப்பதிந்து உள்ளனர்.

இது தொடர் பான விசா ரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில்

நித்யானந்தா சாமியார் வருகிற 29ம்தேதி திருவண்ணாமலையில் ஆன்மீக சொற்பொழிவு

ஆற்றுவார் என விளம்பரப்படுத்தி தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

புதுவையை அடுத்த தமிழகப்பகுதியான கோட்டக்குப்பத்தில் காவல்நிலையம் எதிரே உள்ள

பேரூராட்சி அலுவலக சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த நித்யானந்தா போஸ்டருக்கு செருப்பு மாலை

அணிவிக்கப்பட்டிருந்தது. மேலும் போஸ்டர் முழுவ தும் சாணம் பூசப்பட்டிருந்தது.

அருகில் டிஒய்எப்ஐ (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்) என்று எழுதப்பட்டிருந்தது.

கோட்டக்குப்பத்தில் வேறு சில இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்த நித்யானந்தா போஸ்டர்கள்

மீது சாணம் பூசப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.