பதவி ஏற்பு
கோட்டகுப்பம் பேரூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் மற்றும் வார்டு உறுபினர்களின் பதவி ஏற்பு விழா இன்று காலை பேரூராட்சி மன்றத்தில் பொது மக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
முதலில் பேரூராட்சி தலைவராக சகோதரி. ராபியத்துல் பஷிரியா பதவி ஏற்றார்கள், பின்னர் வார்டு உறுபினர்கள் பதவி பிரமாணம் எடுத்தனர்.பேரூராட்சி செயல் அலுவலர் பிரபாகரன் தலைமை தாங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பேரூராட்சி தலைவர் ரபியஸ்துல்லா பசிரியாவுக்கு முதலில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து 18 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் வானூர் எம்எல்ஏ ஜானகிராமன், முன்னாள் எம்எல்ஏ கணபதி மற்றும் அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தை கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
விழா அரங்கில் அதிமுக தொண்டர்கள் அதிக அளவில் அமர்ந்திருந்தனர். அதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விழாவில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. சப்இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து, விழா அரங்கில் இருந்த அதிமுக தொண்டர்களை வெளியே அனுப்பினர். அதன் பின்னர் பதவி ஏற்பு விழா தொடங்கியது.
Pananayagam vendradhu. Vaalthukkal
LikeLike
who is going to be the thunai thalaivar ?
LikeLike
who is kottakuppam thunai thalaivar?
LikeLike