கோட்டக்குப்பத்தில் வேட்பாளர்களுக்கான தேர்தல் விதிமுறை கூட்டம்


கோட்டக்குப்பத்தில் வேட்பாளர்களுக்கான தேர்தல் விதிமுறை கூட்டம்

தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் 17மற்றும் 19ம் தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களிடம் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

கோட்டக் குப்பம் பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் விதிமுறை கூட்டம் கோட்டக்குப்பத்தில் நடந்தது. பேரூராட்சி அலுவலர் பிரபாகரன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

பேரூராட்சி அலுவலர் பிரபாகரன் பேசுகையில், வேட்பாளர்கள் அவர்களது பிரசார நோட்டீஸ்களை வாக்காளர்களிடம் அளிக்க வேண்டும். நோட்டீஸ் மற்றும் போஸ்டர்களை எங்கேயும் ஓட்டுதல் கூடாது. டிஜிட்டல் பேனர்கள் வைக்கக்கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் வேட்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும், என்றார்.

உதவி தேர்தல் அலுவலர் குமார், தேமுதிக நகர செயலாளர் முகமது சாதிக், திமுக வேட்பாளர் பாலஅம்பிகை தட்சிணாமூர்த்தி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, அதிமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

One comment

  1. ஊரில் அணைத்து கட்சியினரும் சுவரை நரடிச்சி விட்டார்கள், விட்டின் உரிமையாளர் நினைத்தாள் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கலாம்.

    Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.