கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜமீத் நகர் பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் அங்கு ஒருவர் தூக்குப்போட்ட நிலையில் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்துவிட்டு கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவருக்கு சுமார் 50 வயது இருக்கும். யாராவது அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisements