முஸ்லிம் லீக் தலைவர் கோட்டக்குப்பம் காஜி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்


இஸ்லாமியத் தமிழலக்கியக் கழகத்தின் துணைத் தலைவரும், பேச்சாளரும், சமூகப் பணியாளரும், இலக்கிய ஆர்வலரும், கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவரும், அஞ்சுமன் நூஸ்ரத்துல் இஸ்லாம் நூலகத்தின் பொதுச் செயலாளருமான கோட்டகுப்பம் காஜி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் இன்று 15/11/2014 மாலை  வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ) (“நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்)

இலக்கியக் கழகத்தின் 6வது மற்றும் 9வது ஆண்டு பெருவிழாவை முன்னின்று நடத்தியவர், மேலும் தமிழக அரசின் தமிழ் மாமணி விருது பெற்றவர் ஆவார்.

 

அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள எல்லாம் வல்ல இறைவனிடம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் ஆமீன்!

4 comments

  1. இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)

    Like

  2. எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன்.

    Like

  3. இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)

    எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக ஆமீன்!

    Like

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.