கோட்டகுப்பம் ஒருங்கிணைந்த பொது நல சங்கம் (KISWA) மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான் நிறுவனம் (PIMS)ஆகியவை சார்பில் மாதரசே ரவ்னகுல் இஸ்லாம் வளாகத்தில் இலவச தொடர் மருத்துவ முகாம் இன்று 10/10/2014 துவங்கியது.
முகாமை, கிஸ்வா சங்க தலைவர் A . முஹம்மத் பாரூக் துவக்கி வைத்தார். முகாமில், நோயாளிகளுக்கு இரண்டு குழந்தைகள் மருத்துவர்கள் மற்றும் இரண்டு மகளிர் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். முகாமில் 63 பேர் பயன்பெற்றனர், 8 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்க பட்டனர். முகாமில் அனைவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கினார்.
இந்த முகாம் அணைத்து வெள்ளிகிழமைகளில் மேற்படி இடத்தில் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகிறோம் .
முகாம் ஏற்பாடுகளை கிஸ்வா உறுபினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
ungalin eintha muyarchikku en thanks
LikeLike