தகவல் : TNTJ kottakuppam

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வை மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதி இருக்கிறார்கள். விடைத்தாள் மதிப்பீட்டு பணி மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து மதிப்பெண் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி சென்னை கிண்டியில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மையத்தில் (டேட்டா சென்டர்) மேற்கொள்ளப்பட்டது. மதிப்பெண் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது.
தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில வினாடிகளில், இணைய தளங்களில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்.
சிறப்பு ஏற்பாடுகள்
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையத்தில் (நிக் சென்டர்) மாணவ–மாணவிகள் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் இதே போன்று இலவசமாக தேர்வு முடிவை அறிய தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.