கோட்டக்குப்பத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு ?


20130519-103332.jpg

 

கோட்டக்குப்பம்  பேரூராட்சி  அதிகாரிகள் அலட்சியப் போக்கினால் பிளாஸ்டிக் பாலித்தீன் பொருட்களுக்கு தடை விதித் தும் படுஜோராக விற்பனை நடந்து வருகிறது.கோட்டக்குப்பம்  பேரூராட்சி பகுதியில் சாக்கடை மற்றும் குப்பைகளில் பிளாஸ்டிக் பாலித்தீன் பைகள்டீ கப்புகள்தெர்மாகூல் பிளேட்டுகள் அதிகரித்துள்ளனஇதனால் சாக்கடை கழிவுநீர் சீராக செல்வதில் பிரச்சனை ஏற்பட்டது.இதனையடுத்து பேரூராட்சி  சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கும்விற்பனை செய்வதற்கும் கடந்த 16.07.2012 தேதி நடந்த நகர மன்ற கூட்டத்தில் தடை செய்து தீர்மானம் (தீர்மானம் எண்.142) நிறைவேற்றப் பட்டது.அதன்படி பேரூராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் மறுசுழற் சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பைகள்தட்டுகள்கப்புகள்டம்ளர்மேஜை விரிப்புதெர்மா கூல் பிளேட்டுகள் ஆகியவை விற்பதற்கும்உபயோகப்படுத்துவதை 14.09.2012ம் தேதிக்குள் நிறுத்திகொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. மேலும் கால அவகாசத் திற்குப் பின் விற்பனை செய்யும் பிளாஸ் டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்மீறி விற்பவர்களுக்கு 100 ரூபாய் முதல் 500  ரூபாய் வரை அபராதம் விதிப்பது என பேரூராட்சி அறிவித்தது.ஆனால் அறிவிப்பிற்குப் பின் பெயரளவிற்கு பள்ளி மாணவமாணவர்களை அழைத்து விழிப்புணர்வு ஊர்வலம் மட்டும் நடத்தினர்பின்னர் பிளாஸ்டிக் விற்பனை நடைபெறுகிறதாதொடர்ந்து உபயோகப்படுத்தப்படுகிறதா என்பதை கண்டு கொள்ளவில்லை.இதனால் கோட்டக்குப்பம் நகரில் கடைகள்டீ கடைஓட்டல்கள்இரவு நேர தள்ளுவண்டி கடைகள்திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் தண்ணீர்,டீ கப்தெர்மாகூல் பிளேட்டுகள்பிளாஸ் டிக் கவர் உபயோகம் மீண்டும் அதிகரித்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்வதாக கூறி கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றி விளம்பரம் உள்ளிட்ட செலவுகளை செய்து பொதுமக்களின் வரிப் பணத்தை தான் பேரூராட்சி நிர்வாகமும்அதிகாரிகளும் வீணடித்து வருகின்றனர்நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

பிரான்ஸ் FREE TVயில் நிகழ்ச்சி ஒளிபரப்பு


20130518-095244.jpg

டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார் தாசன்) அவர்களின் சொற்பொழிவு


பிரான்ஸ் இஸ்லாமிய மாநாட்டில் டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார் தாசன்) அவர்களின் சொற்பொழிவு

 

 

நன்றி :  நீடூர்  ஆன்லைன்

கோட்டகுப்பத்தின் புதிய அடையாளம் – உமர் மஹால்


கோட்டகுப்பம் பழைய பட்டின பாதையில் புதிதாக உமர்  மஹால் என்ற பெயரில் திருமண மண்டபம் திறக்கபட்டுள்ளது. உங்கள் வீட்டு அணைத்து சுப காரியங்களுக்கு ஏற்ற வகையில் இதில் அணைத்து வசதியும் உள்ளது. சுகாதாரமான சமையல் அறை  மற்றும் பல நூறு பேர் ஒரே நேரத்தில் உணவருதும் வகையில் கிழ் தளத்தில் வசதி உள்ளது. மேலும்  பார்பவர்களை மயக்கும் வகையில் அலங்கார வேலைபாடுகள் மண்டபம் முழுவதும் உள்ளது. 

நமதூர் மக்களின் நல் ஆதரவை  எதிர்நோக்கும்  

ஜனாப் .அன்சாரி உமர்ஹதாப் 

பாரிஸ் இஸ்லாமிய மாநாடு 2013


இன்று 11/05/2013 பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டின் புகைப்பட தொகுப்பு

IMG-20130511-WA0005 IMG-20130511-WA0007 IMG-20130511-WA0014 IMG-20130511-WA0017 IMG-20130511-WA0020 IMG-20130511-WA0021

 

20130511-200006.jpg

20130511-200010.jpg

20130511-200015.jpg

20130511-200019.jpg

20130511-200023.jpg

20130511-200027.jpg

20130511-200031.jpg

20130511-200035.jpg

கோட்டக்குப்பத்தில் மழைத் தொழுகை


TNTJ கோட்டக்குப்பம் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 12/5/2013 ஞாயிற்றுக்கிழமை தைக்கால் திடலில் சரியாக காலை  7 மணிக்கு மழை வேண்டி  தொழுகை நடைபெற  இருக்கிறது.  மழைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் இத்தொழுகையில் அனைவரும் குடும்பத்துடன் கலந்துக்கொளும்மாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 

20130511-105411.jpg

 

20130511-111803.jpg

 

 

தகவல் : TNTJ kottakuppam

மே 22ம் தேதி பிளஸ்டூ தேர்வு முடிவு வெளியீடு


தமிழகத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவுகளை இணையதளம் மூலம் உடனடியாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வை மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதி இருக்கிறார்கள். விடைத்தாள் மதிப்பீட்டு பணி மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து மதிப்பெண் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி சென்னை கிண்டியில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மையத்தில் (டேட்டா சென்டர்) மேற்கொள்ளப்பட்டது. மதிப்பெண் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது.

இந்நிலையில் பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு சென்னை கல்லூரிச்சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்குனரகத்தில் வெளியிடப்படுகிறது. அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தேர்வு முடிவுகளையும், ரேங்க் பட்டியலையும் வெளியிடுகிறார்.

தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில வினாடிகளில், இணைய தளங்களில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்.

http://www.tnresults.nic.in

http://www.dge1.tn.nic.in

http://www.dge2.tn.nic.in

http://www.dge3.tn.nic.in

சிறப்பு ஏற்பாடுகள்

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையத்தில் (நிக் சென்டர்) மாணவ–மாணவிகள் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் இதே போன்று இலவசமாக தேர்வு முடிவை அறிய தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சிங்காரவேலர் மாளிகை கட்டிடத்தின் தரைதளத்தில் இயங்கும் மக்கள் குறைதீர்ப்பு மையத்திலும், 5 ஆவது தளத்தில் செயல்படும் தேசிய தகவலியல் மையத்திலும் மாணவ–மாணவிகள் தேர்வு முடிவுகளை இலவசமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,893 other followers

%d bloggers like this: